/* */

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க தடுக்க தடுப்பூசி அவசியம்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

15.01.2022தேதிக்குள்இரண்டுதவணை கொரோனாதடுப்பூசிசெலுத்திகொண்டவர்கள் முன்னெச்சரிக்கைதடுப்பூசிசெலுத்திக்கொள்ளதகுதியானவர்கள்

HIGHLIGHTS

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க தடுக்க  தடுப்பூசி  அவசியம்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
X

பைல் படம்

அரியலூர் மாவட்டத்தில் 18 முதல் 59 வயது வரையுள்ள நபர்களுக்கு 15.07.2022 முதல் 30.09.2022 வரை மாவட்டம் முழுவதும் இலவச முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பூசி அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செலுத்தப்படும்.

தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நமது மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 முதல் 59 வயது வரையுள்ள நபர்களுக்கு இலவசமாக முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 105.6%-இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 105.02% ஆகும். 15-18 வயதிற்கு உட்பட்டோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 100.91% இரண்டாம் தவணை தடுப்பூசிசெலுத்திக் கொண்டவர்கள் 88.51% ஆகும்.12-14 வயதிற்கு உட்பட்டோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 111.14%. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 80.14% ஆகும்.

இதுவரை மொத்தமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 103.09% இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 100.7% ஆகும். கர்ப்பிணி பெண்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 102%. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 99% ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 102%. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 98%. முன்களப்பணியாளர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 109% இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 60% முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 45% சுகாதாரப் பணியாளர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 111%- இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 65% நமது மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 100% தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

15.01.2023 தேதிக்குள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள். எனவே, 18 முதல் 59 வயது வரையுள்ள அனைவரும் இலவசமாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 16 July 2022 7:17 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  2. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  3. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  5. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  6. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  7. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  8. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  9. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  10. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...