/* */

சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

அரியலூர் மாவட்டத்தில் சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது
X

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்.

பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் கிராமத்தை சேர்ந்த விஜயன்(35) கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் உள்ள ஒரு வீட்டில் சிசிடிவி கேமரா பழுதுபார்க்கும் போது, அந்த வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

அதேபோல், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கோடாலி கிராமத்தை சேர்ந்த செல்வகணபதி(20). குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்றநிலையில், அப்பகுதியில் உள்ள 16 வயது சிறுமியிடம் பழகி, ஆசைவார்த்தை கூறி கடந்த அக்டோபர் 1 ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்நிலையில், மாவட்ட எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், மேற்கண்ட இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி உத்தரவிட்டார்.



Updated On: 17 Nov 2021 4:38 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  3. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  4. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  5. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  8. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  10. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...