அரியலூர் துணை மின் நிலையங்களின் பராமரிப்பு பணிக்காக 2 நாட்கள் மின்தடை
அரியலூர் துணைமின் நிலையங்களில் மின்பாதை பராமரிப்பு பணிக்காக 2 நாட்கள் மின்தடை செய்யப்படுகிறது.
HIGHLIGHTS
அரியலூர் துணைமின் நிலையத்தில் கீழ்கண்ட மின்பாதையில் 24.06.2021 மற்றும் 25.06.2021 வரை பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும்.
அரியலூர் துணை மின்நிலையத்திலிருந்து 11KV கலெக்டர் ஆபிஸ் மின்பாதை வழியாக மின்சாரம் பெறும் அரியலூர் வடக்கு பிரிவிற்கு உட்பட்ட உயர் மற்றும் தாழ்வழுத்த தொழில் மின் இணைப்பு நுகர்வோர்கள் ஆகிய பகுதிகளில் 24.06.2021 அன்று காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது.
11KV மைன்ஸ் மின்பாதை வழியாக மின்சாரம் பெறும் அரியலூர் கிராமியம் பிரிவிற்கு உட்பட்ட உயர் மற்றும் தாழ்வழுத்த தொழில் மின் இணைப்பு மற்றும் வணிக மின் இணைப்பு நுகர்வோர்கள், கே.வி.எஸ் மருத்துவமனை ஆகிய பகுதிகளில், 24.06.2021 அன்று காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது.
1KV குளப்பாடி மின்பாதை வழியாக மின்சாரம் பெறும் மகாலிங்கபுரம், மங்கலம், கோவிந்தபுரம், கொல்லாபுரம் ஆகிய பகுதிகளில், 24.06.2021 அன்று காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது.
தேளுர் துணை மின் நிலையத்திலிருந்து 11KV விளாங்குடி மின்பாதை வழியாக மின்சாரம் பெறும் விளாங்குடி, கீழவிளாங்குடி, நாச்சியார்பேட்டை, ஆதிச்சனூர் ஆகிய பகுதிகளில், 25.06.2021 அன்றும் காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மின் விநியோகம் இருக்காது.
11KV கல்லங்குறிச்சி மின்பாதை வழியாக மின்சாரம் பெறும் கல்லங்குறிச்சி, மணக்குடி, கோப்பிலியங்குடிகாடு, கடுகூர், சீனிவாசபுரம், தாமரைகுளம், வெங்கட்ரமணபுரம், ஓட்டக்கோவில், பொய்யாதநல்லூர், ஓ.கூத்தூர், கோவிந்தபுரம், நல்லாம்பத்தை, சாலைக்குறிச்சி, பள்ளக்காவேரி, லிங்கத்தடிமேடு, கயர்லாபாத் ஆகிய பகுதிகளில், 25.06.2021 அன்று காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மின் விநியோகம் இருக்காது.
தேளுர் துணை மின் நிலையத்திலிருந்து 11KV பாளையக்குடி மின்பாதை வழியாக மின்சாரம் பெறும் காத்தான்குடிகாடு, காவனூர், அம்பாபூர், வாளரகுறிச்சி, பாளையக்குடி, கிளிமங்கலம் ஆகிய பகுதிகளில், 25.06.2021 அன்று மதியம் 02.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது.
மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னே பணி முடிக்கப்பட்டால் உடனடியாக மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும் & காத்தலும்) .பொ.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.