/* */

அரியலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

அரியலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டம் வெங்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலந்தைகூடம் கிராமத்தில் குட்கா கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு தலைமையில் வெங்கனூர் உதவி ஆய்வாளர் கருப்பையா ஆகியோர் சோதனை செய்தனர்.

இலந்தைகூடம் கடைத்தெருவில் உள்ள மளிகை கடை எதிரில் ஓம்னி வாகனமொன்று சந்தேகத்திற்கு இடமாக நின்றதையடுத்து சோதனை செய்ததில் சுமார் 1,82,000/-ரூபாய் மதிப்புள்ள 150 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் குட்கா கடத்தி திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கீழகண்ணுகுளம் உடையார் தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் குமரவேல் (35), முசிறி தாலுகா பழம்புத்தூர் கிராமத்தில் உள்ள வெள்ளாளர் தெருவை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் விக்னேஷ் (20) ஆகிய இருவரையும் கைது செய்து, ரூபாய் 1.82 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ குட்கா பொருட்கள், ஆம்னி வேன் மற்றும் 1.82 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


கைது செய்யப்பட்ட இருவரையும் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் குட்கா மற்றும் போதைப்பொருட்களை வாங்கி விற்று வந்த செம்பியக்குடி கிராமத்தைச் சேர்ந்த கடை உரிமையாளர் பாண்டியன் (36) மற்றும் குட்கா பொருட்களை பதுக்க இடமளித்த வைத்தியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிகரன் ஆகியோர் தப்பியோடியதை அடுத்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 2 Jan 2022 2:50 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை