Begin typing your search above and press return to search.
அரியலூரில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர் மாவட்டத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
HIGHLIGHTS
திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் அறிவுரைப்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி காவல்துறை அதிகாரி மற்றும் காவல்துறையினர் அரியலூர் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் குற்றம் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தினார்கள்.
அப்போது பயணிகள் யாரும் சந்தேகிக்கும் வகையில் ஆயுதங்களுடன் ஆட்டோவில் ஏறினால், சந்தேகிக்கும் படியான நபர்களை பொது இடங்களில் எங்காவது கண்டால், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கவேண்டும். இந்த தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று கூறப்பட்டது.
பாதுகாப்பான அரியலூர் மாவட்டத்தை உருவாக்க உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.