Begin typing your search above and press return to search.
அரியலூரில் திங்கள்தோறும் நடக்கும் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து
அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம், சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு நாளை முதல் திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம், கிராம அளவில் நடைபெறும் பட்டா சிறப்பு முகாம்கள், விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம், மனுநீதி நாள் திட்ட முகாம்கள் ஆகியவை அரசின் மறு உத்தரவு வரும் வரை நடைபெறாது.
எனவே, பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்களை தபால் முலமாகவோ, ttps://cmhelpline.tn.gov/portal/en/signin என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.