/* */

சிறுபான்மையின மக்கள் பசுமை வீடு பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

வழிகாட்டு நெறிமுறைகளின்படி மொத்த ஒதுக்கீட்டில் 15 சதவிகிதம் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட வேண்டும்.

HIGHLIGHTS

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் குடியிருப்புத்திட்டம் (ஊரகம்) மற்றும் பசுமை வீடு திட்டங்களின் கீழ் தகுதியுள்ள ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் மற்றும் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) வழிகாட்டு நெறிமுறைகளின்படி மொத்த ஒதுக்கீட்டில் 15 சதவிகிதம் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட வேண்டும். எனவே அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் (இஸ்லாமியர்கள் மற்றும் கிருத்தவர்கள்) சம்மந்தப்பட்ட ஊரக பஞ்சாயத்து மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களை தொடர்பு கொண்டு மேற்படி திட்டங்களின்கீழ் விண்ணப்பித்து பயன்பெறும்படி அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Oct 2021 11:08 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  6. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  7. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  9. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  10. திருவள்ளூர்
    தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!