Begin typing your search above and press return to search.
அரியலூரில் உழைப்பாளர் தினத்தையொட்டி சிஐடியு கொடி ஏற்றும் நிகழ்ச்சி
உழைப்பாளர் தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில், அரியலூரில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
உழைப்பாளர் தினத்தையொட்டி அரியலூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியையும், அரசு சிமென்ட் ஆலை, மின்சார அலுவலகம், அரசு போக்குவரத்து பணிமனை, வாலாஜாநகரம், பெருமாள் கோயில் ஆட்டோ நிறுத்தம், எருத்துகாரன்பட்டி, விளையாட்டு மைதானப்பகுதி, தாமரைக்குளம், ஒட்டக்கோவில், சிஐடியு அலுவலகம் ஆகிய பகுதிகளில் சிஐடியு கொடியும் ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சிற்றம்பலம், மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணன், துணைத் தலைவர் சந்தானம் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.