Begin typing your search above and press return to search.
சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை
அரியலூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு 15ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், முன்னூரான்காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை பிள்ளை. இவர் அதே பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிச்சைப்பிள்ளையை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு இன்று அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் குற்றவாளி பிச்சைப்பிள்ளைக்கு 15ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை என தீர்ப்பளித்தார்.