/* */

ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளம் கிராம ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளம் கிராம ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளம் கிராம ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
X
சீறிப்பாய்ந்த காளையை இளைஞர் ஒருவர் அடக்கினார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600 காளைகள் கலந்து கொண்டுள்ளன. காளைகளை கட்டி தழுவி அடக்க 200 காளையர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட காளைகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகள் வாடி வாசல் முன்பு குழுமியிருந்த காளையர்கள் போட்டி போட்டு அடக்கினர்.


காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் காளையர்களுக்கு அடங்காமல் சீறி பாய்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் குத்து விளக்கு, சைக்கிள், சில்வர் அண்டா, குடம், சேர்,கட்டில்,பணமுடிப்பு, தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

போட்டியின் போது காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களும் அரசின் வழிகாட்டுதல் படி பரிசோதனை செய்த பின்னரே களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

போட்டியின் போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 April 2022 8:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...