Begin typing your search above and press return to search.
திருமானூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்
மஞ்சமேடு கிராமத்தில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், மஞ்சமேடு கிராமத்தில், மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி உத்தரவின் பேரில், கரீப் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நெல்லை அரசே கொள்முதல் செய்யும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்து, கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்தார். துணை தலைவர் அகல்யா தர்மராஜ் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், கிராம முக்கியஸ்தர்கள், விவசாயிகள் மற்றும், கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் சதீஷ் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.