Begin typing your search above and press return to search.
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 2 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 2 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்து உள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் 2021-2022 -ஆம் ஆண்டில் கரீப் சாகுபடி குறுவை பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில், இரண்டாம் கட்டமாக, அரியலூர் வட்டத்தில், குலமாணிக்கம் மற்றும் அழகியமணவாளன் ஆகிய கிராமங்களில், இன்று முதல் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட குலமாணிக்கம் மற்றும் அழகியமணவாளன் ஆகிய கிராமங்களில், நேரடி கொள்முதல் நிலையம் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாயப் பெருமக்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.