/* */

அன்னிமங்கலம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

அன்னிமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

அன்னிமங்கலம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
X

அன்னிமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் அன்னிமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருமானூர் அடுத்த அன்னிமங்கலம் கிராமத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஆறுபடை முருகன், மாரியம்மன், காளியம்மன் மற்றும் ஞானாம்பிகை உடனாய தியானலிங்கேஸ்வரர் கோயில்களின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், கடந்த 4-ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்யாஹவாசனம் உள்ளிட்ட பூஜைகளும், தொடர்ந்து 4 கால பூஜைகளும் நடைபெற்று, நேற்று காலை 9 மணிக்கு மேல், யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து, மேற்கண்ட கோயில்களில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 6 April 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...