Begin typing your search above and press return to search.
துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல்நிலையங்களில் ஒப்படைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா விடுத்துள்ள செய்திகுறிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டதை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமைதாரர்களும் அவர்களது படைக்கலன்களை அவர்களது காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்குமாறும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் படைக்கலன்களை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல் ஆகியவை தடை செய்து ஆணையிடப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார்.