/* */

கிரிக்கெட்: உலக கோப்பைக்கு ஆஸ்திரேலிய வீரர் கொடுக்கும் மரியாதையை பாருங்க..

கிரிக்கெட் போட்டியில் வென்ற உலக கோப்பைக்கு ஆஸ்திரேலிய வீரர் கொடுக்கும் மரியாதை பற்றிய இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் ட்ரண்டிங் ஆனது.

HIGHLIGHTS

கிரிக்கெட்: உலக கோப்பைக்கு ஆஸ்திரேலிய வீரர் கொடுக்கும் மரியாதையை பாருங்க..
X

உலககோப்பையின் மீது கால்களை வைத்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை வென்ற ஆஸ்திரேலியா அணி வீரர் மிட்சல் மார்ஸ் அந்த கோப்பையை தனது காலடியில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி முடிவுற்றது. உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்ற 10 அணிகளில் 9 அணிகளை வென்ற இந்திய அணி இறுதியாக இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது. லீக் போட்டிகளில் தோல்வியையே தழுவாத இந்திய அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்திய ரசிகர்களிடம் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

பொதுவாக எந்த ஒரு விளையாட்டிலும் வெற்றி தோல்வி என மாறி மாறி தான் வரும். இறுதி போட்டியில் யாராவது ஒரு அணி தான் வெற்றி பெற முடியும். அந்த வகையில் இந்திய அணி வீரர்களை விட சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணி கோப்பையை வெல்ல முடியாமல் இன்னும் நான்கு வருடங்கள் காத்திருக்க கூடிய சூழலை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணி வீரர்களின் செயல்பாடுகள் பற்றி என்னதான் விமர்சனம் செய்தாலும் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. விளையாட்டு என்றால் அதில் ஒருவர் தோற்று தானே ஆக வேண்டும். அந்த வகையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. பிரதமர் மோடி கூட உங்களுடன் இருப்போம் எதிர்காலம் நமதே என்று தான் நமது வீரர்க
ளுக்கு ஆறுதல் கூ றி வாழ்த்தியிருக்கிறார். ஆனால் கோப்பையை கைவிட்ட சோகத்தில் இந்திய வீரர்கள் மைதானத்திலேயே அழுத காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

ஆறாவது முறையாக உலக கோப்பையை முத்தமிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் மைதானத்தை விட்டு கோப்பையுடன் தங்கள் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு சென்றதும் அந்த கோப்பைக்கு என்ன மரியாதை கொடுத்தார்கள் என்பது இப்போது வெளிவந்துள்ளது. பரிசளிப்பு விழா முடிந்த பின்னர் ஓட்டல் அறையில் தங்கி இருந்த ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஸ் உலகக் கோப்பையின் மேல் இரண்டு கால்களையும் தூக்கி வைத்து இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.

அது மற்ற சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி உள்ளது. போராடி பெற்ற உலக கோப்பைக்கு அதுவும் இந்திய திருநாட்டின் பிரதமர் மோடி வழங்கிய உலக கோப்பைக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? இது இந்திய திருநாட்டையே அவமதிப்பது போல் உள்ளது என சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி நம் நாட்டின் மீது பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் வேதனை கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Updated On: 21 Nov 2023 12:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...