/* */

ஓஷோ: வாழ்வை விழிப்புணர்வுடன் வாழ்ந்து, கரைந்து அனுபவிக்க சொன்ன ஞானி

பல்வேறு மதங்கள் மற்றும் சித்தாந்தங்கள் பற்றிய அவரது சொற்பொழிவு அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய ஆளுமைத்தன்மையை கொண்டது.

HIGHLIGHTS

ஓஷோ: வாழ்வை விழிப்புணர்வுடன் வாழ்ந்து,  கரைந்து அனுபவிக்க சொன்ன ஞானி
X

ஓஷோ

பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ் என்றும் அழைக்கப்படும் ஓஷோ, இந்தியாவைச் சேர்ந்த ஆன்மீக ஆசிரியர் ஆவார். ஓஷோ கடந்த காலத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பதோ எதிர்காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதோ நிகழ்காலத்தின் அழகையும் உண்மையையும் அனுபவிப்பதில் இருந்து விலகிவிடும் என்று அவர் நம்பினார்.

அவரது போதனைகள் பலருக்கு மன அமைதியைக் கண்டறியவும் தங்களை சுயபரிசோதனை செய்யவும் உதவியது. ஓஷோவின் கருத்துக்கள் பாரம்பரிய நம்பிக்கைகளிலிருந்து வேறுபட்டு, சமூகத்தின் எதிர்பார்ப்புகளிலிருந்து விடுபட மக்களை ஊக்குவிக்கின்றன. அவரது போதனைகள் உலகெங்கிலும் தங்களைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் ஆழமான புரிதலைத் தேடும் மக்களிடம் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்துகின்றன.

இங்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாருமில்லை அனைவரும் சமமும் இல்லை ஒவ்வொருவரும் தனித்தன்மையுடைய ஒப்பீடற்றவர்கள் நீங்கள் நீங்கள்தான், நான் நான்தான்.

உண்மை என்பது வெளியில் தேட வேண்டிய ஒன்றல்ல, உள்ளுக்குள் உணர வேண்டிய ஒன்று.


நீங்கள் துன்பப்பட்டால் அது உங்களால் தான், நீங்கள் ஆனந்தமாக உணர்ந்தால் அதுவும் உங்களால் தான். வேறு யாரும் பொறுப்பல்ல, நீங்கள்தான், நீங்கள் மட்டுமே பொறுப்பு. உங்களின் நரகமும் சொர்க்கமும் நீங்களே.

இரண்டு அடிகளை ஒன்றாக எடுத்து வைக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை; ஒரு நேரத்தில் உங்களால் ஒரு அடி மட்டுமே வைக்க முடியும்.

முற்றிலும் உடைந்திருக்கும் போது உங்களால் சிரிக்க முடிந்தால், அடுத்த முறை உங்களை உடைக்க எதுவும் இல்லை.

உலகத்தை மாற்றுவதற்கு, நம்மிலிருந்தே தொடங்க வேண்டும்; வெளியிலிருந்து அல்ல, நம் நினைப்பிலேயே உள்ளது உலகம்.

உங்களின் உள்ளுணர்வை கேளுங்கள். அது உங்களுக்கு தொடர்ந்து குறிப்புகளை அளிக்கிறது; அது ஒரு அமைதியான, மெல்லிய குரல். அது உங்களுக்கு சத்தமாக கேட்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்தால், உங்கள் ஆழ்மனது காட்டும் உங்களுக்கான வழியை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள்.

யாரைப்போலோ ஆக வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். உங்களை மேம்படுத்த முடியாது, ஏனெனில் நீங்கள் ஏற்கனவே ஒரு தலைசிறந்த படைப்ப்புதான். நீங்கள் அதை அறிந்து உணர வேண்டும்.

தெரியாத ஒன்றுடன் ஏற்படும் காதலே தைரியம்.

யதார்த்தமாக இருங்கள்: ஒரு அதிசயத்திற்கு திட்டமிடுங்கள்.

உலகின் மிகப்பெரிய பயம், பிறர் என்ன நினைப்பார்கள் எனும் பயமே, அந்த பயத்தை கடக்கும் தருணம் முதல், இனி நீங்கள் ஆடு அல்ல, சிங்கம்.


மனம் ஒரு அழகான வேலைக்காரன் ஆனால் ஆபத்தான எஜமானன்.

நீங்கள் எதையும் கற்க விரும்பினால், நம்பிக்கை கொள்ள கற்றுக்கொள்ளுங்கள், நுட்பங்களை அல்ல. நீங்கள் எதையும் அறிய விரும்பினால், தெய்வீகத்தை அறிந்து கொள்ளுங்கள், புனித நூல்களை அல்ல. நீங்கள் ஏதாவது ஆக விரும்பினால், நீங்களாகவே இருங்கள், உங்களின் ஈகோவாக அல்ல.

தாமரை இலையில் நீர் போல வாழ்வில் எதிர்மறை தாக்கங்களை தொட விடாதீர்கள்.


மனிதனின் முழுக் கண்ணோட்டமும் இங்கேயே இப்போதே என்றுதான் இருக்க வேண்டும். இது தவிர வேறொரு இடமும் நேரமும் எங்கும் என்றும் கிடையாது.

ஆக்கப்பூர்வமாக இருங்கள்' என்று நான் கூறும்போது, நீங்கள் அனைவரும் பெரிய ஓவியர்களாகவும் சிறந்த கவிஞர்களாகவும் ஆக வேண்டும் என்று நான் கூறவில்லை. உங்கள் வாழ்க்கை ஒரு ஓவியமாக இருக்கட்டும், உங்கள் வாழ்க்கை ஒரு கவிதையாக இருக்கட்டும் என்றே நான் கூறுகிறேன்.

உங்களை நீங்களே நேசியுங்கள் மதியுங்கள், எதற்காகவும் அதை சமரசம் செய்து கொள்ளாதீர்கள். அதன் பிறகு தானாகவே எவ்வளவு வளர்ச்சி அடைகிறீர்கள் என்பதை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.


அன்பில் தேவைகள் இல்லை, ஆசைகள் இல்லை, எதிர்பார்ப்புகள் இல்லை. அன்பில் அன்பு மட்டுமே உள்ளது அப்படிப்பட்ட அன்பில்தான் அதில்தான் மகிழ்ச்சி பொங்கும்.

நீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை பறிக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் அதை பறித்தால், அது இறந்துவிடும், உங்களுக்கு அதன் மீதான ஆசையும் முடிந்துவிடும். எனவே நீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். அன்பு என்பது உடைமையாக்கிகொள்வது பற்றியது அல்ல, அன்பு என்பது அப்படியே ஏற்றுக்கொள்வது.



சோகம் ஆழத்தைக் கொடுக்கிறது. மகிழ்ச்சி உயரத்தைக் கொடுக்கிறது. சோகம் வேர்களைத் தருகிறது. மகிழ்ச்சி கிளைகளை அளிக்கிறது. மகிழ்ச்சி என்பது வானத்தில் செல்லும் மரம் போன்றது, சோகம் என்பது பூமியின் கருப்பையின் வேர்கள் போன்றது.


நன்மை-தீமை, கசப்பு-இனிப்பு, இருள்-ஒளி, கோடை-குளிர் என எல்லா வழிகளிலும் வாழ்க்கையை அனுபவியுங்கள். எல்லாவற்றிலும் இரு பக்கத்தையும் அனுபவியுங்கள். அனுபவத்தைக் கண்டு பயப்படாதீர்கள், ஏனெனில் நிறைய அனுபவங்களுடன் அதிக மேலும் மேன்மையடைவீர்கள்.


பிறந்த பிறகு கடவுளிடம் மீண்டும் இணைவதற்கான இந்த நீண்ட கடினமான பயணத்தில்தான் அனைத்து அழகும், கவிதைகளும், மதிக்கத்தக்கதும் குறிப்பிடத்தக்கதுமான அனைத்தும் உள்ளன.


மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறதா என்பது உண்மையான கேள்வி அல்ல. மரணத்திற்கு முன் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா என்பதே உண்மையான கேள்வி.

Updated On: 14 April 2024 8:41 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  2. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  3. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  5. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  7. நாமக்கல்
    குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்லூரியில் 15 ம் தேதி கல்லூரி கனவு...
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!
  9. வீடியோ
    😡DMK-வை விமர்சித்தா கஞ்சா வழக்கா ? SavukkuShankar விவகாரத்தில்...
  10. வீடியோ
    SavukkuShankar-க்கு X-Ray எடுக்க இரண்டு நாளாக போராடும் வழக்கறிஞர்...