/* */

தனித்து விடப்பட்டதா, அதிமுக..? 10 நாள் ஆகியும் ஒருத்தர் கூட கூட்டணிக்கு வரலையே..??

லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய நேரடி மற்றும் மறைமுக கூட்டங்களில் இதுவரை யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

HIGHLIGHTS

தனித்து விடப்பட்டதா, அதிமுக..? 10 நாள் ஆகியும் ஒருத்தர் கூட கூட்டணிக்கு வரலையே..??
X

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)

கிட்டத்தட்ட அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி 10 நாட்கள் ஆகிவிட்டது. அதிமுக ஆலோசனை செய்ய தொடங்கி 10 நாட்கள் ஆகியும் கூட இதுவரை எந்த பெரிய கட்சியும் அதிமுகவுடன் ஆலோசனை செய்ய முன்வரவில்லை.

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பாக சமீபத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது வேறு கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. கூட்டணியில் இடம் கேட்க பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சி வரை எதுவும் வரவில்லை.

முக்கியமாக தேமுதிக, பாமக இரண்டும் அதிமுக கூட்டணி உடன் ஆலோசனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு கட்சிகளும் இதுவரை அதிமுகவிடம் நேரடியாக ஆலோசனை செய்யவே இல்லை. அதன் பின் அதிமுகவின் டாப் லீடர் சார்பாக பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. முக்கியமாக விஐபி மாஜி ஒருவர் சார்பாக பல்வேறு கட்சிகளிடம் ஆலோசனைகள் செய்யப்பட்டு உள்ளன.

ஆனால் பாமக, தேமுதிக என்று எந்த கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் கடைசி வரை கூட்டணி பேச்சுவார்த்தையை, திட்டங்களை அதிமுக முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக விஐபி மாஜி நடத்திய பேச்சுவார்த்தையில், பாமக மட்டும் முதலில் கொஞ்சம் பாசிட்டிவ்வாக பேசி உள்ளது. ஆனால் பாமக அதிக இடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாமக - அதிமுக கூட்டணி படியவில்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே புரட்சி பாரதம் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மற்றபடி தேமுதிக உட்பட வேறு எந்த கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜகவுடன் மட்டும் கூட்டணி வைக்க வேண்டாம் என்று எடப்பாடி சார்பாக உறுதியாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் கிட்டத்தட்ட லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்து விடப்பட்டு விட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியான சில வார்த்தைகளை கட்சியின் டாப் தலைவர்களிடம் கூறியதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி பேச்சு வார்த்தைக்கு முன்பாக.. பாஜகவுடன் கண்டிப்பாக கூட்டணி வைக்க மாட்டோம். பாஜகவை தவிர்த்து மற்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகள் நம் கூட கூட்டணி வைக்கும் வைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

30 தொகுதிகளில் நாம் போட்டியிடுவோம்.. மீதம் உள்ள 10 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்போம். பாஜக இல்லாமல் அதிமுகவின் உண்மையான பலம் என்ன என்பதை நிரூபிப்போம்.. இஸ்லாமிய கட்சிகள், கொங்கு அமைப்புகள், நாடார் அமைப்புகளுடன் கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி அதிமுக டாப் தலைகளிடம் பேசி இருக்கிறாராம். ஆனால் எந்த கட்சியும் இப்போதைக்கு எடப்பாடி உடன் கூட்டணி வைக்க ரெடியாக இல்லை என்று கூறப்படுகிறது.

Updated On: 7 Feb 2024 5:04 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை