/* */

என்னது..? இத்தனை சதவீத அதிமுக ஓட்டு பாஜவுக்கா?

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, செல்லாக்காசுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார்.

HIGHLIGHTS

என்னது..? இத்தனை சதவீத அதிமுக ஓட்டு பாஜவுக்கா?
X

பா.ஜ. தமிழக தலைவர் அண்ணாமலை 

திருவள்ளூரில் நடைபெற்ற 'என் மண் என் மக்கள்' யாத்திரையை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவரிடம், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, "செல்லாக்காசாக இருந்து வரும் ஆர்.பி.உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. பணத்தை கொள்ளையடித்து 5 ஆண்டுகளுக்கு மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலைகளின், தாரக மந்திரம் எல்லாம் எனக்கு தெரியாது. மீடியோ வெளிச்சத்திற்காக என்னை பற்றி பேசும் செல்லாக்காசுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.

கடுமையான வார்த்தைய பயன்படுத்த எனக்கும் தெரியும்.அதிமுக கதவு சாத்தப்பட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்து குறித்து கேட்ட போது, "அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் கதவை உடைத்துக் கொண்டு பாஜகவில் சேர்ந்துள்ளனர். நாங்கள் கதவைத் தட்டி எங்கேயும் போக விரும்பவில்லை. அவர்களே கதவை திறந்து கொண்டு வருகின்றனர்" என்றார்.

அ.தி.மு.க.,- பா.ஜ.க., இடையே வார்த்தை மோதல்கள் நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க.,வில் இருந்து மேலும் பலர் பா.ஜ.க.,வில் சேர வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமல்ல. அ.தி.மு.க.,வில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை விரும்பாத பலர் பா.ஜ.க.,வில் சேர்ந்துள்ளனர்.

இப்படி மொத்தம் 8 சதவீத அ.தி.மு.க., ஓட்டுகள் பா.ஜ.க., பக்கம் திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் மேலும் ஏராளமானோர் சேர வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில், டென்சன் ஆன அ.தி.மு.க., பா.ஜ.க.,வை கடுமையாக விமர்சித்து வருகிறது.

Updated On: 10 Feb 2024 12:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...