/* */

அத்திப்பழம் சாப்பிட்டா உங்களுக்கு சுத்திப்போடணும்..! அவ்ளோ நன்மைகள்..!

அத்திப்பழம் குறித்த விழிப்புணர்வு தற்போது மக்களிடம் ஏற்பட்டுளளது. அதனால் அதன் நன்மைகளால் அதிகம் நுகரப்படுகிறது.

HIGHLIGHTS

அத்திப்பழம் சாப்பிட்டா உங்களுக்கு சுத்திப்போடணும்..! அவ்ளோ நன்மைகள்..!
X

athipalam-அத்திப்பழம் (கோப்பு படம்)

Athipalam

ஆரோக்கிய நன்மைக்கு அத்திப்பழம் சாப்பிடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்திப்பழத்தின் நன்மைகளை பலரும் தற்போது அறிந்துள்ளனர். இந்த பதிவில் வழங்கப்பட்டுள்ள முழு நன்மைகளை அறிந்துக் கொண்டால் கண்டிப்பாக நீங்களும் அத்திப்பழத்தை தினசரி சாப்பிடுவீர்கள்.

Athipalam

உடல் எடை குறைய

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அத்திப்பழம் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அத்திப்பழத்தை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை கூடும். எனவே, ஒரு நாளைக்கு நான்கைந்து வேளைகளுக்கு மேல் சாப்பிடாமல் இருப்பது நல்லது. உடலில் பொட்டாசியம் குறைவாகவும், சோடியம் அதிகமாகவும் இருந்தால் பிபி அதிகரிக்கும். அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் சோடியம் குறைவாகவும் உள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால் பிபி குறையும்.

Athipalam

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் அத்திப்பழம் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அவற்றில் நார்ச்சத்து அதிகம். அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம், நம் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நீங்கள் பைல்ஸால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த உலர்ந்த அத்திப்பழத்தை தண்ணீருடன் சேர்த்து சாப்பிடலாம்.


பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு

அத்திப்பழம் பாலியல் பிரச்சனைகள் மற்றும் கருவுறாமைக்கு அதிசயங்களைச் செய்கிறது. இது விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது மற்றும் வயாக்ரா போன்ற வேலை செய்கிறது. ஆண்கள் 2 அல்லது 3 அத்திப்பழங்களை இரவு முழுவதும் பாலில் ஊறவைத்து, சாப்பிட்டு வந்தால். உங்களுக்கான ஆற்றல் அதிகரிக்கும்.

Athipalam

எலும்புகள் வலுவடையும்

அத்திப்பழத்தில் கால்சியம் அதிகம் உள்ளது. நமது எலும்புகள் வலுவாக இருக்க கால்சியம் தேவை. எனவே அத்திப்பழம் சாப்பிட்டால் எலும்புகள் வலுவாக இருக்கும். இது எலும்புகளை பலவீனப்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயைத் தடுக்கிறது. அத்திப்பழத்தில் ஏராளமான பாலிபினால்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை நச்சுகள், கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் நம் உடலில் நுழைவதைத் தடுக்கின்றன.

அதீத ஆரோக்கிய நன்மைகள்

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட அத்திப்பழம் சாப்பிடுவது நல்லது. அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சனைகளை நூற்றுக்கு நூறு குணமாக்கும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. மலச்சிக்கல் இல்லாதவர்கள் அத்திப்பழத்தை அதிகம் சாப்பிடக்கூடாது. மறதி, அல்சைமர் போன்ற அறிகுறிகள் இருந்தால், அத்திப்பழத்தை சாப்பிட மறக்காதீர்கள். வளர வளர அத்திப்பழம் சாப்பிட்டால் மூளை நன்றாக வேலை செய்கிறது.

Athipalam

பல நன்மைகள் கிடைக்கும்

தொண்டையில் வலி, வீக்கம் இருந்தால், அத்திப்பழத்தை மெதுவாக சாப்பிடுங்கள். இவற்றில் உள்ள மூலம் சளி, தொண்டைப் புண் உள்ளிட்டவைகளில் இருந்து விடுவை தருகிறது. ஆரோக்கியமான சருமம் மற்றும் முடியைப் பெற, அத்திப்பழத்தை பச்சையாகவோ அல்லது உலர்ந்ததாகவோ சாப்பிட வேண்டும். இந்த பழங்கள் ஆஸ்துமா, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பல உடல்நல பிரச்சனைகளை சரி செய்கிறது. அத்திப்பழம் காய்ந்திருந்தால், அதன் விலை அதிகமாக இருக்கும். இருப்பினும், அவற்றில் பல நன்மைகள் இருப்பதால் சாப்பிடுவது நல்லது.

Athipalam


செரிமான அமைப்பு மேம்படும்

அத்திப்பழத்தில் மெக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற தாதுக்கள் உள்ளன. அவை ஆரோக்கியத்தை மட்டுமல்ல, அழகையும் பாதுகாக்கின்றன. குறிப்பாக தோலின் பொலிவை அதிகரிக்கவும், முகத்தில் உள்ள முகப்பருவை குறைக்கவும், தழும்புகளை நீக்கவும், சருமத்தை மென்மையாக்கவும் அத்திப்பழம் உதவுகிறது. அத்திப்பழம் சாப்பிடுவது செரிமான அமைப்பையும் பலப்படுத்துகிறது.

Athipalam

வயிறு பிரச்சனை நீங்கும்

அத்திப்பழம் சாப்பிடுவதால் வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் குறையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பழங்களில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியமான ஆற்றலை அளிக்கிறது. இது ஒரு நபரின் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த பழங்களை சாப்பிடுவதால் உடலில் இரத்த ஓட்டம் சீராகும். இந்த நேரத்தில் அத்திப்பழம் சாப்பிடுவது சிறந்தது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். காரணம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அத்திப்பழம் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள புரோட்டீன்கள், வைட்டமின்கள், கால்சியம் மற்றும் கந்தகம் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Athipalam

பல நோய்கள் தீரும்

அத்திப்பழம் சாப்பிடுவதால் பல நோய்களைத் தடுக்கலாம். தசைகள் வலுவடையும். சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வரவும், ஆண்களின் விந்தணு வளர்ச்சிக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் இருந்து நச்சுக்கள் முற்றிலும் வெளியேறும்.

Updated On: 20 March 2024 2:17 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்