/* */

விமானம் பராமரிப்பு - சீரமைப்பு சேவைகளுக்கான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5%-ஆக குறைப்பு

விமானம் பராமரிப்பு - சீரமைப்பு சேவைகளுக்கான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5%-ஆக குறைப்பு
X

விமானங்கள் உள்நாட்டிலேயே பராமரித்தல், பழுதுபார்ப்பு மற்றும் முழுமையான சீரமைப்பு சேவைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப்போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் (ஜெனரல் – ஓய்வு) வி கே சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், கொவிட்டுக்கு முந்தைய நிதியாண்டான 2019-20 விமானப்பயணம் மேற்கொண்டவர்களில் சராசரி தினந்தோறும் சுமார் நான்கு லட்சமாக இருந்ததாக கூறியுள்ளார். 6 மார்ச் 2022, நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 3.7 லட்சம் பயணிகள், உள்நாட்டு விமானப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக தினசரி விமானப்பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கொவிட் பாதிப்புக்கு முந்தைய நிலையைவிட அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகரித்துவரும் விமானப் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், ஹரியானா உள்ளிட்ட 11 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் விமான எரிபொருளுக்கான மதிப்புக்கூட்டு வரி 5%ஆக குறைந்துள்ளதாகவும் ஜெனரல் வி கே சிங் தெரிவித்துள்ளார்.

Updated On: 14 March 2022 4:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...