/* */

166 ஆண்டு கால வரலாற்றில் இதுவே முதல் முறை

166 ஆண்டு கால இந்திய ரயில்வே வாரியத் தலைவராக முதன் முறையாக பெண் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.

HIGHLIGHTS

166 ஆண்டு கால வரலாற்றில்  இதுவே முதல் முறை
X

இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹா

உலகிலேயே மிகப்பெரியது இந்திய ரயில்வே. இந்தியாவில் அதிக பணியாளர்கள் பணிபுரியும் துறையாகவும் இந்திய ரயில்வே விளங்கி வருகிறது. இந்திய ரயில்களில் தினமும் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை மட்டும் பல சிறிய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அதிகம் என்பது வியப்புக்குரிய செய்தி. தினமும் குறைந்தது 5 கோடி பயணிகளை இந்திய ரயில்வே கையாள்கிறது. 16 லட்சத்திற்கும் அதிக பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அவ்வளவு பெரிய உலகின் மிகப்பெரிய அரசுத்துறையாக இந்திய ரயில்வே சிறப்புகளை பெற்றுள்ளது.

இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹா செப். 1ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்மூலம் 166 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்திய ரயில்வே வாரியத்துக்கு தலைமையேற்ற முதல் பெண் என்ற பெருமையை ஜெயா வர்மா பெற்றார்.

ரயில்வே வாரிய உறுப்பினராக உள்ள ஜெயா வர்மா சின்ஹாவை வாரியத்தின் தலைமை பொறுப்புக்கு, நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து (செப்.1ல்) ஜெயா வர்மா ரயில்வே வாரியத் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அவர் இப்பதவியில் இருப்பார் என ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 2 Sep 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  2. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  3. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  4. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  5. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  6. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  7. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  8. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
  9. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  10. மாதவரம்
    சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்தவர்கள் கைது..!