/* */

கர்ப்பிணி அதிகமாக காபி குடித்தால் என்ன ஆகும்? முதலில் இதனை படியுங்கள்

கர்ப்பிணி பெண்கள் அதிகம் காபி குடித்தால் ரத்தசோகை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

கர்ப்பிணி அதிகமாக காபி குடித்தால் என்ன ஆகும்? முதலில் இதனை படியுங்கள்
X

பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் என வேறுபாடின்றி காபி குடிக்கும் பழக்கம் அனைத்து தரப்பினருக்குமே இருந்து வருகிறது. காபியில், சிக்கிரி காபி, உடனடி காபி என பல வகைகள் இருந்தாலும் தற்போது பெரும்பாலானோர் உடனடி காபியே அருந்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காபியில் உள்ள சத்துக்கள், தொடர்ந்து காபி குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை பார்ப்போம்:


காபியில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி-12 தவிர வேறு எந்த ஊட்டச்சத்துக்களும் பெரிய அளவில் கிடையாது. நூறு கிராம் காபியில் 40 மில்லி கிராம் காபைன் உள்ளது. குளுக்கோஸ் உட்கிரகத்திலைக் குறைப்பதன் மூலமும், குளுக்கோஸ் உறுப்புகளில் இருந்து வெளியாவதைத் தடுப்பதன் மூலமும், இன்சுலின் ஹார்மோன் உணர்வுத் திறனை அதிகரிப்பதன் மூலமும் நீரிழிவு நோயின் தாக்கத்தை காபி சற்று குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அல்சைமர் நோய் என்ற நரம்பு மண்டல சம்பந்தப்பட்ட நோய்க்கு எதிராக காபி பாதுகாப்பதாகவும், அந்நோயின் சிகிச்சையிலும் காபியினைப் பயன்படுத்தலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பார்க்கின்சன்ஸ் நோய் என்ற நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட நோய்க்கான வாய்ப்புகளை காபி குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஈரல் புற்றுநோய், பெருங்குடல் & மலக்குடல் புற்றுநோய், கருப்பையின் எண்டோமெட்ரியல் புற்றுநோய் ஆகியவற்றிற்கான வாய்ப்புகளை காபி குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முடக்குவாதம் ஏற்படும் வாய்ப்புகளை காபி குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


காபி அருந்துவது வாழ்நாளில் நீட்டிக்கின்றதா என்பது குறித்து, கிட்டத்தட்ட 14 முதல் 28 ஆண்டுகள் வரை நடைபெற்ற ஆய்வின் போது, இறப்பு சற்று தள்ளிப் போவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காபியில் மேற்கூறிய நற்பலன்கள் இருந்தாலும் சில கெடு பலன்களும் உண்டு அது குறித்து கீழே பார்ப்போம்.

கர்ப்பிணித் தாய்மார்கள் காபியினை அளவிற்கதிகமாக அருந்தினால், குழந்தை இறந்து பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதுபோல கருக்கலைவதற்கும் வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணி தாய்மார்கள் காபியினை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது, கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த சோகையும், பிறக்கின்ற குழந்தைக்கு ரத்த சோகையும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On: 26 April 2023 2:36 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!