/* */

கயல் - எழில் திருமணம்! மூர்த்தி போட்ட திட்டம்!

கயலுக்கும் எழிலுக்கும் தான் திருமணம் நடக்க வேண்டும் இதற்காக மூர்த்தி போட்ட திட்டம் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

HIGHLIGHTS

கயல் - எழில் திருமணம்! மூர்த்தி போட்ட திட்டம்!
X

மூர்த்தியின் குழந்தையைக் கடத்தி பெரியப்பா தர்மலிங்கம் தான் எந்த எல்லைக்கும் செல்வேன் என காட்டுகிறார். அடைக்கப்பட்ட பழைய குடோனில் தவறுதலாக மாட்டிக் கொண்ட அனுவை, கயல், எழில், மூர்த்தி மூவரும் எப்படி காப்பாற்றுகிறார்கள் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

கயல் இன்றைய எபிசோட் | Kayal serial today episode youtube 27th May 2023


குழந்தை அனுவைக் காப்பாற்றிய நிலையில் எழிலுக்கு நன்றி கூறுகிறாள் கயல். இதுக்குலாம் எதுக்கு நன்றி என்று கேட்கிறான் எழில். கடவுளுக்கு சமமானவன் நீ என்று எழிலைப் பார்த்து கயல் கூற, அவனோ காதலில் திளைக்கிறான். வழக்கம்போல கயல் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கும்போது எழில் அதை காதலாக நினைத்து பேசுவதும் பின் கயல் அதைக் கண்டுபிடிப்பதும் என ஜாலியாக செல்கிறது.

கயலுக்கு அவள் தோழியிடம் இருந்து ஒரு அழைப்பு வருகிறது. அவள் அனு பாப்பா குறித்து நலம் விசாரிக்கிறார். நன்றாக இருக்கிறாள் என்று தெரிந்ததும் இதுக்கு எல்லாம் காரணம் எழில்தான் என்று பாராட்டி பேசுகிறார். அதை ஆமோதித்து பேசும் கயல், எழில் குறித்து மேலும் புகழ்ந்து பேச அவன் மீது காதல் இல்லையா என்று கேட்கிறாள்.

தனக்கு எழில் நல்ல நண்பன். அவன் என் குடும்பத்தில் ஒருவன். அவன் மீது என் அம்மாவுக்கு நிகரான அன்பும் மரியாதையும் இருக்கிறது என்று கூறுகிறாள். எழிலுக்கு 4 நாளில் திருமணம். அவன் நன்றாக இருக்க வேண்டும் ஆர்த்தியைத் திருமணம் செய்துகொண்டு நன்றாக வாழ வேண்டும். என் அம்மாவின் சுயமரியாதை தான் எனக்கு முக்கியம். அவருக்கு எந்த மாதிரியான அவப் பெயரையும் வாங்கித் தரமாட்டேன் என்று கூறுகிறாள். ஆர்த்தியைத் திருமணம் செய்யவில்லை என்றால் பெரியப்பாவும் பெரியம்மாவும் எழிலை அதிகமாக சபிப்பார்கள். அவர்களின் பேச்சைக் கேட்க வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று கூறுகிறாள்.

தன் தம்பி, தங்கைகளை கரை சேர்த்து அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும் அதற்கு நான் உழைக்க வேண்டும் என்று கூறுகிறாள் கயல்.

இந்நிலையில், தோழி இன்னொரு கேள்வியையும் கேட்கிறாள். உன் கடமைகள் அனைத்தையும் முடித்துவிட்டு நீ வரும்போது உனக்காக எழில் காத்திருந்தால் அவரை கல்யாணம் பண்ணிக்க நீ தயாரா என்று கேட்கிறார். முதலில் சமாளிப்பது போல பேசினாலும் அடுத்து நான் என் கடமைகளை முடித்துக் கொண்டு திரும்பி வரும்போது எழில் அவன் அம்மா சம்மதத்தோட எனக்காக காத்திருந்தா கல்யாணம் பண்ணிப்பேன் என்று கூறுகிறாள்.

ஒரு பக்கம் மூர்த்தி தன் தங்கை கயல் தன் குடும்பத்துக்காக என்ன என்னலாமோ செய்திருக்கிறாள். ஆனால் தன்னால் அவளது வாழ்க்கையில் ஒரு நல்ல விசயம் நடக்க மாட்டேங்கிறதே என்று வருத்தப்படுகிறான். அதேநேரம் தன்னிடம் ஒரு திட்டமிருப்பதாகவும் அதன்படி கயலை, எழிலுக்குதான் திருமணம் செய்து வைப்பேன் என்று தெரிவிக்கிறார்.

கயல் நேற்று எபிசோட் | Kayal serial yesterday episode youtube 26th May 2023

மூர்த்தியின் குழந்தையைக் கடத்தி வைத்திருக்கும் அடியாளுக்கு கால் செய்கிறார் பெரியப்பா தர்மலிங்கம். குழந்தையை பாதுகாப்பான இடத்தில்தான் வைத்திருக்கிறீர்களா என்று கேட்கிறார். அதற்கு அந்த அடியாள் அண்ணே அதெல்லாம் நிறைய பாதுகாப்பான இடத்தில்தான் வைத்திருக்கிறோம் நீங்க கவல படாதீங்க. என்ன ஒன்னு அந்த பாப்பா அழுதுட்டே இருக்கு என்கிறான்.

அதற்கு பெரியப்பா தர்மலிங்கம் கடத்தி வச்சிருந்தா பாப்பா அழாம, டிவிங்கிள் டிவிங்கிள்னு பாட்டா படிச்சிட்டு இருக்கும் என்று கூறுகிறார். பத்திரமாக வைத்துக் கொள், வீட்டு ஆளுங்க போலீஸ் ல கம்ப்ளைண்ட் கொடுத்துட்டாங்க என்று கூறுகிறார். பின் அழைப்பைத் துண்டிக்கிறார்.

கயல், எழில், மூர்த்தி மூவரும் ஒரு வீட்டின் முகவரியை தெரிந்துகொண்டு வருகிறார்கள். அந்த வீட்டின் கதவு மூடப்பட்டு கிடக்கிறது. உடனே அத்துமீறி உள்ளே நுழைந்து அங்கிருந்த ஒருவரை அடித்து துவைக்கிறார் மூர்த்தி. கயலும், எழிலும் எவ்வளவோ சமாதானம் செய்தும் அதைக் கேட்காமல் மூர்த்தி அந்த நபரை அடித்து நொறுக்க, அவர் தவறான நபர் என்பது தெரியவந்ததும் வருத்தத்தில் வெளியே வருகிறான். கயலும், எழிலும் வெளியே வந்து மூர்த்தியை சமாதானம் செய்ய, எழில் ஒரு ஐடியாவை செய்கிறான்.

காவல்துறையில் பணிபுரியும் தன் நண்பரிடம் உதவி கேட்டு சிசிடிவி ஃபுட்டேஜ் அனைத்தையும் செக் செய்ய சொல்கிறான். உடனே அவரும் செய்வதாக ஒப்புக்கொள்கிறார். பின் மூர்த்தி நொந்து அழுகிறான். குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என அழுகிறான். பின் எல்லாரும் காரில் கிளம்பி செல்கிறார்கள்.

நாலாபுறமும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அந்த நேரத்தில் காவல்துறை நண்பர் சைதாப்பேட்டையில் கூவம் ஓரம் செல்வதாக கண்டுபிடித்து சொல்கிறார். பின் தான் எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாகவும் உடனே தனக்கு சொல்லும்படியும் கூறிவிட்டு போனை வைக்கிறார்.

இந்நிலையில், பெரியப்பா தர்மலிங்கத்துக்கு ஒரு ஃபோன் வருகிறது. எழிலின் அம்மா அவருக்கு அழைத்துள்ளார். அவரிடம் மூர்த்தியின் குழந்தை காணாமல் போயிவிட்டாரா என்று கேட்கிறார். எழிலும் பந்தக்கால் நட்ட உடனே வெளியே போய்விட்டான் என்று கூறுகிறார். குழந்தையை நீங்க தானே கடத்துனீங்க என்று எழிலின் அம்மா கேட்கிறார். இதனால் பதைபதைத்த தர்மலிங்கம் தான் கடத்தவில்லை என்று கூறுகிறான். சத்தியமாக நான் கடத்தவில்லை என்று தெரிவிக்கிறார் தர்மலிங்கம். தப்பா எடுத்துக்காதீங்க என்று எழிலின் அம்மா தர்மலிங்கத்திடம் கூறுகிறார்.

மூர்த்தியின் குழந்தை அனுவை யாராலும் கண்டுபிடிக்கமுடியாது. காமாட்சி என் காலுல வந்து விழுவா, மூர்த்தி கதறிக்கிட்டு வருவான். நம்ம பொண்ணு கல்யாணம் முடிஞ்சதும் அந்த பொண்ண விட்டுருவோம் என்று வடிவிடம் சொல்கிறார் தர்மலிங்கம்.

குழந்தை அனு இருட்டறையில் பதைபதைத்துக் கொண்டிருக்கிறார். பயந்து போய் அம்மா அம்மா என்று அழுதுகொண்டே இருக்கிறார். அவரிடம் ரௌடி ஒருவர் சாப்பிட என்ன வேண்டும் என்று கூறுகிறார். அவர் பரிதாபப்பட்டு வெளியில் சென்று பிரியாணியும் பாப்பா சாப்பிட எதாவது வாங்கி வருவதாக சொல்லிச் செல்கிறார். பார்த்து சூதானமாக இருக்கும்படி 3 ரௌடிகளிடம் கூறிவிட்டு வெளியில் வருகிறார்.

அதே தெருவில் எழில், கயல், மூர்த்தி ஆகியோர் கையில் மொபைலுடன் அந்த ஆம்னி காரைத் தேடி வருகிறார்கள். ஒவ்வொரு கடையாக ஏறி அனைவரிடமும் இதுகுறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்டோக்காரர், பிரியாணி கடைக்காரர், பிளாஸ்டிக் கடை என ஒவ்வொருவராக கேட்டுக்கொண்டே செல்கிறார்கள்.

அந்தநேரத்தில் குழந்தையைக் கடத்தி வைத்திருக்கும் ரௌடி பாப்பாவுக்கு பிஸ்கட், சாக்லேட் வாங்கிக் கொண்டு, பிரியாணி பொட்டலங்களையும் வாங்கிச் செல்கிறான். அதனை கவனித்த எழில் அவனை ஃபாலோ செய்யலாம் என்று கூறி காரில் பின்தொடர்ந்து செல்கிறார்கள்.

கயல் நாளைய எபிசோட் | Kayal serial tomorrow episode youtube 28th May 2023

பெரியப்பா தர்மலிங்கம் தனது மகள் கல்யாணம் நடக்கவேண்டும் என மூர்த்தியின் குழந்தையைக் கடத்திவிட்டு மொத்த குடும்பத்தையும் அல்லல்பட வைக்கிறார். அந்த சயமத்தில் பந்தக்கால் சரிந்து விழுந்து அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

Updated On: 27 May 2023 2:43 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  7. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  9. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்