/* */

வசூல் மழையில் பார்த்திபன் - மனத்தைக் குளிர்விக்கும் 'இரவின் நிழல்'..!

இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபனின் 'இரவின் நிழல்' வசூலில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

HIGHLIGHTS

வசூல் மழையில் பார்த்திபன் - மனத்தைக் குளிர்விக்கும் இரவின் நிழல்..!
X

நடிகர் ஆர்.பார்த்திபன் இயக்கி நடித்துள்ள உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமாக வெளியாகியுள்ள 'இரவின் நிழல்' படம் வசூலிலும் வரவேற்பிலும் நல்ல தகவல்களை நல்கி வருகிறது. தமிழ்த் திரைப்பட உலகில், பல புதுமையான முயற்சிகளை தனது படங்களில் புகுத்திவரும் புதுமைப்பித்தன்தான் இயக்குநர் ஆர்.பார்த்திபன்.

அவரது மற்றுமோர் புதுமைப்படம்தான் அண்மையில் திரையில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் 'இரவின் நிழல்'. ஏற்கெனவே, 'இரவின் நிழல்' படத்திற்கு சர்வதேச விருதுகள் குவிந்து வரும் நிலையில், தற்போது படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் பார்த்திபனின் அரிதான இந்த மிகப்பெரும் முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி கடந்த ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது என்கிறார்கள். இதுவரை படம், சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளிதாகியுள்ளது. இந்த இனிய தகவல் மேலும் கூடுதலாகும் என்கிற தகவல் 'இரவின் நிழலி'ன் இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபனின் மனத்தை குளிர்வித்து வருவதாக கோடம்பாக்கக் கருத்துப் பட்சிகள் உரத்துச் சொல்கின்றன.

Updated On: 22 July 2022 4:17 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  3. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  4. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  5. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  6. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  8. ஈரோடு
    ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...
  9. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  10. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு