/* */

இலங்கை ஜனாதிபதி ரணில் அவசர அறிவிப்பு

இலங்கையில் பல மாதங்களாகவே நெருக்கடியான நிலையே நீடித்து வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீளவில்லை. இதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

HIGHLIGHTS

இலங்கை ஜனாதிபதி ரணில் அவசர அறிவிப்பு
X

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே


இலங்கையில் அதிபராக கோத்தபய ராஜபக்சேவும், பிரதமராக அவரது தம்பி ராஜபக்சேவும் இருந்தனர். நாடானது பெருத்த பொருளாதார வீழ்ச்சியைக் கண்டதால் விலைவாசி விண்ணைவிட அதிகமானது. இதனால் சாதாரண நடுத்தர குடும்பங்கள் பிழைப்பதே கடினமாகிவிட்டது. அதுவும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு. கிடைத்தாலும் அதிக விலை கொடுத்தே வாங்கவேண்டிய நிர்ப்பந்தம்.

இதனால் பல குடும்பத்தினர் அகதிகளாக தமிழகம் நோக்கி கள்ள படகில் வந்து சேர்ந்தனர். அவர்கள் இங்கு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுமட்டும் அல்லாமல் இலங்கையில் இதுவரை கண்டிராத மக்கள் புரட்சியும் வெடித்து பூகம்பமாகிவிட்டது. கடைசி கட்டமாக ராஜபக்சேவும், அவரது அண்ணன் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகவேண்டும் என அங்குள்ள மக்கள் போர்க்கொடி துாக்கியதோடு கட்டுப்பாடுகளை மீறி ஜனாதிபதி மாளிகையினுள் சென்று அங்கும் போராட்டம் நடத்தியது தனிக்கதை.

இந்நிலையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். அவரும் கோத்தபய ஆதரவாளர் என முத்திரை குத்தி அவருக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால் தற்போது ஜனாதிபதி ரணில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் செப்டம்பர் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். செயலகத்தில் அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நிர்வாகிகளை சந்தித்தபோது இதனை அறிவித்துள்ளார்.

இந்த இடைக்கால வரவு செலவு திட்டத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கு அரசு ஊழியர்கள் தங்களுடைய சுதந்திரமான சேவைகளை நாட்டுக்கு வழங்கி ஒத்துழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த 22 ம் திருத்தச்சட்டமானது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாடு தற்போதுள்ள நிலையில் இதுகுறித்து பொதுவான இணக்கப்பாட்டை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம் என்றும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்எனவும் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

Updated On: 6 Aug 2022 3:12 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்