Begin typing your search above and press return to search.
பெட்ரோல், டீசல் விலையை திடீரென உயர்த்தியது இலங்கை அரசு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 75 ரூபாயும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது
HIGHLIGHTS
பெட்ரோல் விலையை ரூ.35க்கும் டீசல் விலையை ரூ.75க்கும் உயர்த்தியது இலங்கை அரசு.
பெட்ரோல், டீசல் விலையை இலங்கை அரசு திடீரென உயர்த்தியுள்ளது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூபாயும் டீசல் விலையை லிட்டருக்கு 75 ரூபாயும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 303 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல், 338 ரூபாயாக அதிகரித்துள்ளது. 214 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகி வந்த 1 லிட்டர் டீசல் விலை, 289 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.