/* */

தமிழ் புத்தாண்டு விடுமுறை: தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்

தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

HIGHLIGHTS

தமிழ் புத்தாண்டு விடுமுறை: தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்
X

மதுரை தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தாம்பரம் முதல் நாகர்கோவில் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதிவிரைவு சிறப்பு ரயில் (06005) ஏப்ரல் 13 புதன்கிழமை அன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரை வந்து சேரும்.

மதுரையிலிருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவில் தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் டிரைவர் (06006) நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 9 மணிக்கு மதுரை வந்து சேரும். மதுரையில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என மதுரையில் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Updated On: 5 April 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  2. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  3. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  5. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  7. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  8. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  9. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  10. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!