Begin typing your search above and press return to search.
விருதுநகரில் சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 75வது சுதந்திர தின விழா அமுத பெருவிழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப் போட்டியை துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
விருதுநகர், செந்திகுமார நாடார் கல்லூரியில் 75 - வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து ஏற்பாடு செய்த, மாரத்தான் ஓட்ட போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்டார். இந்த போட்டியில் 150க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் .