Begin typing your search above and press return to search.
விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தாலுகா செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் சிபிஐ ஒன்றிய செயலாளர் தமிழார்வன் வெட்டி படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், கொலைக்குற்றம் புரிந்த சமூக விரோதிகளை உடனே கைது செய்யக் கோரியும், உடந்தையாக இருந்த முக்கிய குற்றவாளிகளை தப்ப விடாமல் கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.