காரியாபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம்
Panchayat Council Meet காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS
Panchayat Council Meet
காரியாபட்டி அரசு மருத்துவ மனைக்கு, கூடுதலாக மருத்துவர்கள் பணி அமர்த்த வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப் பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. தலைவர் ஆர்.கே.செந்தில் தலைமை வகித்தார். செயல் அலுவலர் அன்பழகன், துணைத் தலைவர் ரூபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள்,
பணி அமர்த்த மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , அனைத்து வார்டுகளிலும் தீவிர தூய்மை பணி , கொசுமருந்து அடித்தல் பணிகள் மேற்கொள்வது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில், கவுன்சிலர்கள் செல்வராஜ், சங்கரேஸ்வரன், முகமது முஸ்தபா, வசந்தா நாகஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் , முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் அடிப்படை வசதி தெரு விளக்கு ஆகியவை வலியுறுத்தி பேசினார்கள் இதற்கு பதில் அளித்த பேரூராட்சி செந்தில் படிப்படியாக காரியாபட்டி பேரூராட்சியில் அடிப்படை வசதி பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.