/* */

சாத்தூர் அருகே பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க கோரி தொழிலாளர்கள் சாலை மறியல்

சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க கோரி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

HIGHLIGHTS

சாத்தூர் அருகே பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க கோரி தொழிலாளர்கள் சாலை மறியல்
X

சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க கோரி தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாத்தூர் அருகே வெம்பக் கோட்டையில் சுற்றுப்புறச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க கோரி மனு கொடுக்கும் போராட்டத்தின் போது 700க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி பேரியம் நைட்ரேட் இல்லாமல் பட்டாசு தயாரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவை மீறி பேரியம் நைட்ரேட் கொண்டு பட்டாசு தயாரிக்கும் ஆலைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற் பட்டாசு உற்பத்தியாளர்கள் மூடி வைத்துள்ளனர். இந்த நிலையில் பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக் கோட்டையில் சுற்றுப்புறச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க கோரி வெம்பக் கோட்டை சாத்தூர் ஏழாயிரம் பண்ணை,தாயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் சாலையோரத்தில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பட்டாசு தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகம் செல்ல முயன்றனர், பின்னர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

இந்த நிலையில் 500க்கும் மேற்பட்ட பெண் பட்டாசு தொழிலாளர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த வெம்பக்கோட்டை வட்டாட்சியர் தன்ராஜ் மற்றும் அதிகாரிகளிடம் பட்டாசு தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்த போராட்டத்தில் பட்டாசு தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பட்டாசு தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னிட்டு 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Updated On: 26 Nov 2021 1:05 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!