/* */

விருதுநகரில் அரசு ஊழியர் வீட்டில் தங்கம், வெள்ளி, ரொக்க பணம் கொள்ளை

விருதுநகரில் அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை மருத்துவமனை சென்று வந்த ஒரு மணி நேரத்திற்குள் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்

HIGHLIGHTS

விருதுநகரில் அரசு ஊழியர் வீட்டில் தங்கம், வெள்ளி, ரொக்க பணம் கொள்ளை
X

விருதுநகர் அருகே எட்டநாயக்கன்பட்டி, டீச்சர்ஸ் சேட்டிலைட் டவுணை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற கூட்டுறவு சார்பதிவாளர் ஜெகதீசன். இவர் தனது மனைவி கஸ்தூரியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்வதற்காக சூலக்கரைக்கு வெளியே சென்றவர்கள் திரும்பி 1 மணி நேரத்திற்குள் திரும்பியுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கேட்டு உடைக்கப்பட்டு, கதவை உடைத்து உள்ளே திறந்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், 2 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ஜெகதீசன் விருதுநகர் சூலக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மருத்துவமனை சென்று வந்த 1 மணி நேரத்திற்குள் கைவரிசையை காட்டிய கொள்ளையர்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் சமீப காலமாக புதுமுக நபர்கள் சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 April 2022 9:42 AM GMT

Related News