/* */

விழுப்புரம் நீதிமன்ற செய்திகள்: பொன்முடி வழக்கு, பெண் ஐ.பி.எஸ். அதிகாரி வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு ஆகியவற்றை நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது

HIGHLIGHTS

விழுப்புரம் நீதிமன்ற செய்திகள்: பொன்முடி  வழக்கு, பெண் ஐ.பி.எஸ். அதிகாரி வழக்கு ஒத்திவைப்பு
X

விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வரும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 24-ந் தேதிக்கு விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

விழுப்புரம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜன.20-ந்தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து இவ்வழக்கு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.

அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜனவரி.20-ந்தேதி வெள்ளிக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத் ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Updated On: 21 Jan 2023 4:36 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  6. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  8. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  9. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!