/* */

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைகிறது

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது; இன்று ஒரே நாளில் 67 பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைகிறது
X

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, இன்று ஒரே நாளில், 67 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை, 42,346 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று கொரோனாவால் மாவட்டத்தில் எந்த உயிரிழப்பும் இல்லை.

மாவட்டத்தில் இதுவரை 329 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இன்று ஒரேநாளில்மட்டும் 112 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 41,537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 480 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 28 Jun 2021 3:00 PM GMT

Related News