/* */

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: போலீசார் சாட்சியம்

பெண் ஐபிஎஸ் பாலியல் தொல்லை வழக்கில் சாட்சியாக கள்ளக்குறிச்சியில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் ஒருவர் சாட்சியளித்தார்.

HIGHLIGHTS

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்   தொல்லை: போலீசார் சாட்சியம்
X

விழுப்புரம் கோர்ட் (பைல் படம்)

விழுப்புரம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியயல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்தார். இதன் தொடர்ச்சியாக இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சியான அப்போதைய பெரம்பலூர் போலீஸ்காரரும் தற்போது கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவருமான டேவிட்ஆனந்தராஜ் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரது சாட்சியங்களை நீதிபதி புஷ்பராணி பதிவு செய்துகொண்டார்.

தொடர்ந்து, போலீஸ்காரர் டேவிட் ஆனந்தராஜிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீலும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வக்கீலும் குறுக்கு விசாரணை செய்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை 13-ந் தேதிக்கு ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகளான அருணாச்சல பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி பார்த்திபன் மற்றும் பழனிசாமி ஆகிய இருவரும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

Updated On: 12 July 2022 4:14 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்