/* */

டி.ஜி.பி. மீதான பாலியல் வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு

விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் டி.ஜி.பி. மீதான பாலியல் வழக்கை 25ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

டி.ஜி.பி. மீதான பாலியல் வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
X

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சிறப்பு டி.ஜி.பி. மற்றும் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம் குறுக்கு விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில், அரசுதரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு டி.ஜி.பி., எஸ்.பி. ஆகியோர் ஆஜராகவில்லை. இவர்கள் ஆஜராகாததற்கான காரணம் குறித்து அவர்களின் வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். இதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து அரசுதரப்பு சாட்சிகள் ஆஜராகாத நிலையில் வழக்கு விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Updated On: 19 July 2022 1:58 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு