/* */

மாணவி மரண வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

விழுப்புரத்தில் நடைபெற்ற சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்

HIGHLIGHTS

மாணவி மரண வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கீதா தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கனியாமூர் சக்தி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்தவும், மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், பள்ளி நடந்த வன்முறைகளை காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்யும் நடவடிக்களை கைவிடவேண்டும், மரணமடைந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கி, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்,

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார்,வி.ராதாகிருஷ்ணன்,எஸ்.முத்துக்குமரன்,ஏ.சங்கரன், ஜி.ராஜேந்திரன், எஸ்.வேல்மாறன், சே.அறிவழகன், ஆர்டி.முருகன், இடைக்குழு செயலாளர்கள் கண்ணப்பன், கே.குப்புசாமி, வி.கிருஷ்ணராஜ், எம்.கே.முருகன்,டி.ராமதாஸ், ஏ.சகாதேவன், எஸ்.கணபதி,கே.சிவக்குமார் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Updated On: 6 Aug 2022 12:32 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்