/* */

விழுப்புரம் மாவட்டத்தில் பசுமை போர்வை அதிகரிக்க மரக்கன்று நடும் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் பசுமைப் போர்வை அதிகரிக்க மரக்கன்றுகள் நட ப்படும் என ஆட்சித் தகவல் தெரிவித்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் பசுமை போர்வை அதிகரிக்க மரக்கன்று நடும் திட்டம்
X

விழுப்புரம் மாவட்டத்தில் பசுமை போர்வை திட்டத்தை ஆய்வு செய்தார் ஆட்சியர் மோகன்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள ஆசூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளதை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பசுமை போர்வையை அதிகரிப்பதற்கும், அரசுக்கு சொந்தமான இடங்களில் அடர் காடுகள், குறுங்காடுகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு வைத்து வளர்த்தல் ஆகியவற்றுக்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இந்த ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் நாற்றுப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஆயிரத்து 400 புளியங்கன்று, 5 ஆயிரத்து 900 பூவரசன் கன்று, 870 வேம்பு மரக்கன்று, 640 கொடுக்காப்புளி மரக்கன்று, 350 நாவல் மரக்கன்று, 210 தேக்கு மரக்கன்று, 500 நெல்லிகன்று, 900 இலுப்பை மரக்கன்று, 407 காட்டு உசில மரக்கன்று என மொத்தம் 16 ஆயிரத்து 187 மரக்கன்றுகள் பதியம் செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு பல்வேறு இடங்களில் நடவு செய்ய தயார் நிலையில் உள்ளது. நாற்றுப் பண்ணைக்காக தலா ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் 2 நாற்றுப்பண்ணை கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் அருகில் ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் மழைநீர் தேங்கும் வகையில் அகழியும், அதனருகில் அமைக்கப்பட்ட பேரளவு மரக்கன்றுகள் தற்போது சிறந்த முறையில் வளர்க்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு இடங்களில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

Updated On: 22 Sep 2022 10:46 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  2. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  4. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  7. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  8. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  10. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!