Begin typing your search above and press return to search.
விழுப்புரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் திடீரென கனமழை பெய்து வருகிறது.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வானம் காலை நேரத்தில் வெய்யில் சுட்டெரிப்பதும், மாலை நேரத்தில் திடீரென மேகமூட்டம் சூழ்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று மாலையும் திடீர் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் குளிர்ச்சி சூழ்நிலை நிலவுதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் இந்த திடீர் கனமழையால் விதைப்பு மற்றும் நடவு பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்.