/* */

ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள ஆசிரியர் பயிற்சி மையத்தில் ஜே ஆர் சி சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
X

மரக்கன்று நடப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஜே.ஆர்.சி சார்பில் ஆசிரியர் பயிற்சி மையத்தில் மரக்கன்று நடுதல்,வழங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. எண்ணாயிரம், அரசு மேனிலைப்பள்ளியில் 1 முதல் 10 வகுப்பு வரையிலாக ஆசிரியர்களுக்கு சிஆர்சி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் முட்டத்தூர். ஒய்க்காப் மேனிலைப் பள்ளி, நேமூர், ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி, திருநந்திபுரம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, எண்ணாயிரம், அரசு மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.

பயிற்சியின் நிறைவில் ஜே.ஆர்.சி மாவட்டக் கன்வீனர் முனைவர். ம பாபு செல்வதுரை தலைமையில் நிழல்தரும் மரக்கன்றுகள் பள்ளியில் நடப்பட்டது. அத்துடன் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புனித பேட்ரிக் மெட்ரிக், பள்ளி ஜே.ஆர்.சி ஆலோசகர் பி. லூயிஸ், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.லீனஸ் பிளமிங் ஜோஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 18 Jun 2022 1:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...