/* */

அதிமுக 10 ஆண்டில் செய்யாததை 10 மாதத்தில் செய்து உள்ளோம்: முதல்வர் ஸ்டாலின்

அதிமுக கடந்த 10 ஆண்டில் செய்யாததை 10 மாதத்தில் திமுக செய்து உள்ளது என முதல்வர் ஸ்டாலின் விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் கூறினார்

HIGHLIGHTS

அதிமுக 10 ஆண்டில் செய்யாததை 10 மாதத்தில் செய்து உள்ளோம்: முதல்வர் ஸ்டாலின்
X

பயனாளிகளுக்கு பல்வேறு துறை சார்பில் நலத்திட்டங்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட பெரிய கொழுவாரியில் மாவட்டத்தில் 5வது சமத்துவபுரமாக கடந்த 2010-2011 திமுக ஆட்சியில் 2.88 கோடி மதிப்பீட்டில் 100 வீடுகள் கொண்ட பெரியார் சமத்துவபுரம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது,

அதனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக கிடப்பில் போட்ட சமத்துவபுரத்தை, திமுக ஆட்சி பொறுப்பேற்ற 10 மாதத்தில் திறந்து உள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார், முன்னதாக முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக சார்பில் வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து பொது மக்கள் கொடுத்த மனுக்களை பெற்று கொண்டார், தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.24 கோடியே,77ஆயிரம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 38 அரசு கட்டிடங்களை திறந்து வைத்தார், 10 ஆயிரத்து,722 பயனாளிகளுக்கு பல்வேறு துறை சார்பில் ரூ.42 கோடியே,69 லட்டத்து,98 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கினார்,

அதனை தொடர்ந்து திண்டிவனம் தொழிற்பேட்டைக்கு நேரில் சென்று அங்கு தனியார் நிறுவனம் மூலம் ரூ.500 கோடியில் அமைய உள்ள தோல் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்,

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, பெரிய கருப்பன், மஸ்தான், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன்,மணிகண்ணன், ஊராட்சி துறை தலைமை செயலர் அமுதா, ஆட்சியர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 April 2022 2:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’