/* */

விழுப்புரம் மாவட்டத்தில் தரைப்பாலம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தரைப்பாலம் கட்டுமான பணியை ஆட்சியர் மோகன் இன்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் தரைப்பாலம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு
X

திருக்கோவிலூர் அருகே தரைப்பாலம் கட்டுமான பணியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சியில், இன்று (05.07.2022) செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத்துறையின் மூலம், தேவனூர் ஓடை தரைப்பாலம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் மோகன் பார்வையிட்டார்.

இதில் அவர் பேசுகையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம், வெள்ள மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ், விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில், தேவனூர் ஓடைப்பகுதியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. இன்னும் ஒருவார காலத்தில் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் செயல்பாட்டிற்கு துவங்க உள்ளன என தெரிவித்தார்.

அப்போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவசேனா, உதவி செயற்பொறியாளர் தனராஜ், உதவி பொறியாளர் வசந்தபிரியா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 5 July 2022 2:24 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?