/* */

திண்டிவனம் பகுதியில் அறிவிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் மின் தடை

திண்டிவனம் பகுதியில் அறிவிக்கப்பட்ட மின்தடை நேரத்தை விட கூடுதலான மின்தடையால் மக்கள் அவதி அடைந்தனர்

HIGHLIGHTS

திண்டிவனம் பகுதியில் அறிவிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் மின் தடை
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் காலை 9 மணி முதல் 2 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பு பத்திரிக்கைகளிலும் வெளிவந்தது.

நேற்று காலை 9 மணிக்கு நிறுத்தப்பட்ட மின்சாரம் மதியம் இரண்டு மணியை கடந்தும் ஐந்து மணி வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட மின்தடையை விட கூடுதலாக மின்நிறுத்தம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் எப்போது மின்சாரம் வரும் என தெரியாமல் புழுக்கத்தில் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து திண்டிவனம் செயற்பொறியாளரிடம் கேட்டால் பணியை முடித்து விட்டோம் விழுப்புரத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்க உத்தரவு வந்தால் மட்டுமே மின்வினியோகம் செய்யப்படும் என பொறுப்பற்ற பதிலை தெரிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களிலாவது இது போன்ற பராமரிப்பு பணிகள் பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Updated On: 29 July 2021 4:58 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!