திண்டிவனத்தில் இரு தரப்பு மோதல்: இருவர் கைது
Crime News Tamil-விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் இருதரப்பினர் மோதிக் கொண்டதில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
Crime News Tamil-விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பெலாகுப்பம் ரோடு, பாரதிதாசன் பேட்டை, கண்ணகி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(50). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முனியம்மாள்(48) என்பவரின் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் இதுகுறித்து இரு தரப்பினரும் ரோசணை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இதில் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் ஆனந்தபாபு, அருள், அன்பரசு, சதீஷ், பார்த்திபன், ஆனந்தி, அருகலட்சுமி, கார்த்திகேயன், முனியம்மாள் ஆகிய 9 பேர் மீதும், முனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சந்திரா, பன்னீர்செல்வம், சுதாகர், செல்வி, லட்சுமி, மோகன் உள்பட 7 பேர் மீதும் ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வம், கார்த்திகேயன்(24) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2