Begin typing your search above and press return to search.
செஞ்சியில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
செஞ்சியில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
செஞ்சியில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செஞ்சி ராஜா தேசிங்கு மேல்நிலைப்பள்ளியில், செஞ்சி பேரூராட்சி, ஆனந்தபுரம் பேரூராட்சி ஆகிய பேரூராட்சிகளின் தேர்தல், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இரண்டு பேரூராட்சிகளுக்கும் ஒரே இடத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் கூடுதல் பாதுகாப்பும், அடிப்படை வசதிகள், முகவர்கள், வேட்பாளர், செல்வதற்கான வழிகள் வாக்கு எண்ணும் மேசைகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் விரைந்து முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.