/* */

வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய ஆட்டோக்கள், நுழைவுவரி செலுத்தாத வெளிமாநில கார், லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
X

வேலூரில் வாகன சோதனை நடத்திய காவல்துறையினர்

வேலூர் நகரில் ஆவணங்கள் இல்லாமல் பல ஆட்டோக்கள் இயங்குவதாக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும், போக்குவரத்துக் காவல்துறையும் இணைந்து வாகனச் சோதனை நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஆட்டோக்களை மறித்து சோதனைச் செய்தனர். அப்போது டிரைவர்களிடம் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் கூறியதாவது: கலெக்டர் உத்தரவின் பேரில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சோதனைச் செய்தோம். அப்போது வெளிமாநில வாகனங்கள் நுழைவு வரி கட்டாமல் தமிழகத்துக்குள் வந்தது தெரியவந்தது. இதையடுத்து நுழைவு வரி செலுத்தாத 2 லாரிகள், 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பம்பர் பொருத்தப்பட்டிருந்த 3 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பொக்லைன் எந்திரங்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் சாலைவரி வசூலிக்கப்பட்டது. இந்தச் சோதனை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 24 July 2021 4:21 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  4. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  6. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  7. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  8. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  10. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு