/* */

வேலூர் மாநகராட்சி மண்டித்தெரு, லாங்கு பஜாரில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூர் மாநகராட்சி மண்டித்தெரு, லாங்கு பஜாரில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

HIGHLIGHTS

வேலூர் மாநகராட்சி மண்டித்தெரு, லாங்கு பஜாரில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

வேலூரில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூர் மண்டித்தெரு, லாங்குபஜாரில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். அதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சங்கரனுக்கு புகார்கள் சென்றன. அவரது உத்தரவின்பேரில் 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் மண்டித்தெரு, லாங்குபஜாரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பழக்கடைகளை அகற்றினர். மேலும் அரிசி மூட்டைகள், மளிகை பொருட்களை கடையின் உள்ளே வைக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர். பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக நடைபாதையில் கடையின் பெயர்பலகை உள்பட எந்த பொருட்களையும் வைக்க கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On: 1 July 2021 4:33 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  3. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  4. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  8. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  9. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  10. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்