/* */

விரிஞ்சிபுரம் பாலாற்றில் உயர்மட்ட மேம்பாலம்: அமைச்சர் எ.வ.வேலு

வேலூர் அருகே விரிஞ்சிபுரம் பாலாற்றில் ரூ.30 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

விரிஞ்சிபுரம் பாலாற்றில் உயர்மட்ட மேம்பாலம்:  அமைச்சர் எ.வ.வேலு
X

விரிஞ்சிபுரத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை ஆய்வு செய்த அமைச்சர் வேலு 

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விரிஞ்சிபுரத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பலத்த மழை பெய்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை பாலாற்றில் பெருவெள்ளமாக ஓடியதால், விரிஞ்சிபுரம் தரைப்பாலம் உடைந்து சேதம் ஆனது. 322 மீட்டர் நீளமுடைய பாலத்தில் சுமார் 80 மீட்டர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த பின்னர் தற்காலிக போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.

முன்னதாக அவர் வேலூர் மாங்காய்மண்டி அருகே உள்ள நிக்கல்சன் கால்வாயை ஆய்வு செய்தார். ஆய்வின்போது கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், உதவி காவல் ஆய்வாளர் ஆல்பர்ட் ஜான், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 1 Dec 2021 4:37 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?