/* */

இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுடன் பழக்கம்.. திருடனாக மாறிய இளைஞர்...

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணுக்கு பரிசு வழங்க ஆசைப்பட்டு பக்கத்து வீட்டில் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுடன் பழக்கம்.. திருடனாக மாறிய இளைஞர்...
X

திருட்டில் ஈடுபட்டதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜூன் ராஜ்குமார்.

வேலூர் மாவட்டம், சித்தேரி பகுதியில் உள்ள குமரவேல்நகரைச் சேர்ந்தவர் நரேஷ் குமார். திருமணங்களுக்கு பை தயாரித்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர், மகா சிவராத்திரியை முன்னிட்டு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு கடந்த 18 ஆம் தேதி இரவு 10 மணியளவில் குடும்பத்தினருடன் சென்றுவிட்டு நள்ளிரவு 2 மணிக்கு வீடு திரும்பி உள்ளார்.

அப்போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாதநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 11 பவுன் தங்க நகைகள், 250 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. அதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த நரேஷ்குமார் இதுகுறித்து அரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்குப் பதிந்த போலீஸார் அந்த வீட்டுக்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, கருப்பு உடையுடன் சிவப்பு குல்லா அணிந்திருந்த ஒல்லியான உடலமைப்பை கொண்ட ஒருவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர் யார்? என்று அடையாளம் தெரியாத நிலையில், போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, சித்தேரி ஆஞ்சநேயர் கோயில் தெருவைச் சேர்ந்த அர்ஜூன் ராஜ்குமார் (19) என்பவராக இருக்கலாம் என போலீஸாருக்கு தகவல் தெரியவந்தது.

அவர், ஏற்கெனவே அடிதடி வழக்கில் அரியூர் காவல் நிலையத்தில் கைதாகி சிறை சென்றவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்திருப்பதும் தெரியவந்தது. அதேநேரம், நரேஷ்குமார் வீட்டில் காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது அர்ஜூன் ராஜ்குமார் தனது நண்பருடன் அந்த தெருவின் வழியாக சந்தேகத்துக்கிடமாக நடமாடிக் கொண்டிருந்தாராம்.

மேலும், நரேஷ்குமார் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர் அணிந்திருந்த சிவப்பு குல்லாவுடன் அர்ஜூன் ராஜ்குமார் அணிந்திருந்த சிவப்பு குல்லாவும் ஒத்துப்போனதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை பிடித்து முறைப்படி விசாரித்ததில் அர்ஜூன் ராஜ்குமார் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டாராம்.

இதைத்தொடர்ந்து நரேஷ்குமார் வீட்டில் திருடிய தங்க நகைகள், வெள்ளி பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன் திருட்டு சம்பவத்தின் போது அவர் அணிந்திருந்த கருப்பு உடையையும், குல்லாவையும் பறிமுதல் செய்தார்.

திருட்டு தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், பூரி கட்டை மற்றும் வீட்டில் இருந்த சுத்தியை பயன்படுத்தி பீரோவை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்களை அர்ஜூன் ராஜ்குமார் திருடியது தெரியவந்தது. மேலும், இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பழகிய கோவை பெண் தோழிக்கு பரிசுகளை வழங்குவதற்காக வீட்டில் திருடியதாக அர்ஜூன் ராஜ்குமார் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 22 Feb 2023 4:53 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  2. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  3. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  4. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  10. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...