Begin typing your search above and press return to search.
சித்தூரிலிருந்து கடத்தி வந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்; கடத்தியவர் கைது
சித்தூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
HIGHLIGHTS
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கினர்.
ஆனால் அந்த வாகனம் நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் துரத்திப் பிடித்தனர். பின்னர், இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது பையில் இரண்டு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, கஞ்சாவை கடத்தி வந்த அன்புராஜ் (24) என்பரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவும் இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.